ழனி

நாளை முதல் ஒரு மாதத்துக்கு மழனி மலையில் ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இறைவன் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்குத் தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.  பக்தர்கள் தரிசனத்திற்காக அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது.

இதைத் தவிர பக்தர்கள் மலைக்கோவிலுக்குச் சென்று வர ரோப் கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகளும் உள்ளன. இவற்றில் விரைவாகவும், இயற்கை அழகை ரசித்தபடியும் செல்லலாம் என்பதால் பெரும்பாலானோரின் முதல் தேர்வாக ரோப் கார் உள்ளது.

பழனி ரோப் கார் நிலையத்தில் மாதாந்திர, வருடாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்நேரத்தில் ரோப் கார் சேவை நிறுத்தப்படும்.  நாளை முதல் ரோப் கார் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதனால் நாளை முதல் ஒரு மாதத்திற்கு ரோப் கார் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.