சென்னை

நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுப்பாடு நீக்கம் செய்யப்படுகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாகச் சென்னை புறநகர் ரயில் சேவைகளில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.  அதன்படி சீசன் டிக்கட்டுகள், ரிடர்ன் டிக்கட்டுகள் வழங்குவது நிறுத்தப்பட்டன.   ரயில்களில் பயணம் செய்ய ஆண்களுக்கு நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

அதன்பிறகு இரண்டு டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்கள் எப்போது வேண்டுமானாலும் பயணம் செய்யவும் ரிடர்ன் டிக்கட்டுகள் வாங்கவும் அனுமதி அளிக்கப்பட்டன.    மேலும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் கட்டாயம் ஆக்கப்பட்டது தொடர்ந்தது.

இந்நிலையில் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாளை அதாவது நவம்பர் 15 முதல் சென்னை புறநகர் ரயில்களில் அனைத்து பயணிகளும் எவ்வித கட்டுப்பாடும் இன்றி பயணம்  செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  முன்பு போல் அனைவருக்கும் ரிடர்ன் டிக்கட்டுகள்  மற்றும் சீசன் டிக்கட்டுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகள் மட்டும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.