சென்னை

ன்று முதல் தமிழகம் முழுவதும் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது.

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தில் தக்காளி விலை தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகிறது. இடையில் சற்று குறைந்த நிலையில் இருந்த தக்காளி விலை மீண்டும் அதிகரித்தது. சென்னைக்கு வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து குறைவாகவே வருவதால் விலையேற்றத்துடன் காணப்படுகிறது.

இன்று சென்னை, கோயம்பேட்டில் தக்காளி விலை கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் படி தமிழகம் முழுவதும் இன்று  முதல் 300 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் ஏற்கனவே 85 நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களின் நலன் கருதி இன்று முதல் மாநிலம் முழுவதும் 300 நியாயவிலைக்கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்பட உள்ளது. இந்த ரேஷன் கடைகளில் ரூபாய் 60க்கு விற்பனை செய்யப்பட உள்ளது..