சென்னை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சனிக்கிழமை வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது.

இன்று சென்னைமெட்ரோ ரயில் நிர்வாகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில்,

“தீபாவளி தொடர் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்லும் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக மாலை நெரிசல் மிகு நேரத்தில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை, இன்று (9-ந் தேதி), நாளை (10-ந் தேதி) மற்றும் நாளை மறுநாள் (11-ந் தேதி) ஆகிய நாட்களில் இரவு 10:00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

நீட்டிக்கப்பட்ட நெரிசல் மிகு நேரங்களில், இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை மெட்ரோ ரயில் சேவைகள் இரண்டு வழித்தடங்களிலும் 9 நிமிட இடைவெளிக்குப் பதிலாக 6 நிமிட இடைவெளியிலும் இயக்கப்படும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமம் இல்லாத பயணத்தை மேற்கொள்ளப் பயணிகள் மெட்ரோ ரயில் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

இந்த மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு இன்று (வியாழக்கிழமை), 10.11.2023 (வெள்ளிக்கிழமை) மற்றும் 11.11.2023 (சனிக்கிழமை) ஆகிய மூன்று நாட்களுக்கு மட்டுமே” 

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.