நாமக்கல்

இன்று வரி உயரவைக் கண்டித்து லாரி உரிமையாளர்கள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துகின்றனர்.

தமிழக அரசு லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து லாரிகளுக்கான காலாண்டு வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும். ஆன்லைனில் அபராதம் விதிக்கும் முறையைக் கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் இன்று  அடையாள வேலைநிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளது.

இன்று வேலைநிறுத்த போராட்டம் காரணமாகத் தமிழகம் முழுவதும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 6 லட்சம் லாரிகள், 25 லட்சம் இலகுரக வாகனங்கள் ஓடாது எனச் சம்மேளனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வேலை நிறுத்தத்தால் பலகோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேங்கும் அபாயம் உள்ளது.

இன்றைய வேலைநிறுத்த போராட்டத்திற்குத் தமிழக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு தெரிவிப்பதாக மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல.ராசாமணி கூறியுள்ளார். எனவே தமிழகம் முழுவதும், 55 ஆயிரம் மணல் லாரிகள் இயங்காது என்றும் அவர் கூறினார்.