சென்னை

ன்று முதல் தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநில முதலாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்;

இந்த ஆண்டு தமிழகத்தில் நடந்து முடிந்த பிளஸ் 2 பொதுத்தேர்வை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதியுள்ளனர். இன்று 12ம் ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ. தேர்வு முடிவுகள் வருகிற 20-ந்தேதி வெளியாக உள்ளது. தேர்வு முடிவுகள் வெளியான

முடிவுகளுக்கு பிறகு மாணவ மாணவிகள் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

இன்று முதல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024- 2025-ம் ஆண்டுக்கான இளநிலை முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

கல்லுரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் மூலமும், கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.