சென்னை

ன்று முதல் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

ஏராளமானோர்  வெளியூரில் இருந்து சென்னைக்கு வந்து பணி புரிகின்றனர்.  வரும் 4 ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுவதால் அவர்கள் சொந்த ஊருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.  இதைப் போல் வெளியூரில் பணி புரிவோரும் சென்னைக்கு வர உள்ளனர்.

இதையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இன்று முதல் இயக்க உள்ளது.  கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், பூந்தமல்லி மற்றும் தாம்பரம் ரயில் நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் என 6 மையத்தில் இருந்து வரும் 3 ஆம் தேதி வரை பேருந்துகள் இந்த பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இன்று முதல் சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு மொத்தமாக 9806 பேருந்துகள் இயக்கப்படுகிறது,  இதில் இன்று மட்டும் வழக்கமான பேருந்துகளுடன் கூடுதலாக 2491 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மொத்தமாக 9 நடைமேடைகளில் இருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.  இதில் 3 நடைமேடைகளில் தென் மாவட்டத்துக்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும்.

சிறப்பு பேருந்துகளுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்ய 12 சிறப்புக் கவுண்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த அரசு பேருந்து இயக்கம் தொடர்பான தகவல்களை 044 24749002 எண்ணிற்கு அழைத்துத் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் தனியார் பேருந்துகளைக் கண்காணிக்கவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் குழு அமைத்துள்ளனர்.

இந்த தனியார் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் தொடர்பாக 1800 425 6151 என்ற எண்ணிற்குப் புகார் அளிக்கலாம். இதுவரை கூடுதல் கட்டண புகார் தொடர்பாக 2 தனியார் பேருந்துகளைப் பறிமுதல் செய்துள்ளனர்.