சென்னை

ரும் 9 ஆம் தேதி முதல் சென்னை – டெல்லி ஜி டி எக்ஸ்பிரஸ் செண்டிரலுக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து புறப்படுகிறது.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

”சென்னை ரயில்வே கோட்டத்தில், பல்வேறு இடங்களில் ரயில் பாதை மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் பாதை பராமரிப்பு, மேம்பாட்டு பணிகள் நடக்க உள்ளன.

எனவே, சென்னை சென்ட்ரல் – புதுடில்லி இடையே இயக்கப்படும் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் எனப்படும் ஜி.டி. விரைவு ரயில் வரும் 9-ம் தேதி முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

நேற்று புதுடில்லியில் இருந்து புறப்பட்ட ஜி.டி. விரைவு ரயில் சென்னை எழும்பூர் வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்படும்.

வரும் 9 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டு எழும்பூர், ஆந்திர மாநிலம் கூடூர் வழியாக புதுடெல்லிக்கு செல்லும். இந்த மாற்றம் அடுத்த 3 மாதங்களுக்கு  அமலில் இருக்கும்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.