தேவன்கரே

ர்நாடக முதல்வர் சித்தராமையா  நாடெங்கும் மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா தேவன்கரே தொகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் ,

“பாஜகவின் 25 எம் பி க்களும் கர்நாடக மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து எந்த கேள்வியும் எழுப்பியதில்லை. பாஜக தங்கள் கட்சியின் எம்.பி.க்களை. கைவிட்டு விட்டது. ஆனால் காங்கிரஸ் அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றக்கூடிய அரசு. இந்த அரசு ஆட்சிக்கு வந்து 8 மாதங்களில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது.

நாடெங்கும் மக்களவை   மோடி எதிர்ப்பு அலை அதிகரித்துவிட்டது.  இதை பா.ஜ.க. உணர்ந்துள்ளது. எனவே தலித்துகள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரை இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பிவிடும் வேலையை பா.ஜ.க. செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இட ஒதுக்கீடு சதவிகிதத்தை அதிகரிப்போம் என்று கூறினோம்.

அதை நாங்கள் தலித்துகள், பிற்படுத்தப்பட்டோரிடம் இருந்து இட ஒதுக்கீட்டை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவோம் என்று கூறியதாக பிரதமர் மோடி மிகப்பெரிய பொய்யை கூறியுள்ளார். நாடு இந்த அளவிற்கு பொய்களை கூறும் பிரதமரை இதுவரை பார்த்ததில்லை.”

என்று தெரிவித்துள்ளார்.