சென்னை

ஜூன் 19 முதல் 21 அவரை சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“மூன்றாவது நிலையான நிதி பணிக்குழு (SFWG) கூட்டம் 19-6-2023 முதல் 21-6-2023 ஆகிய முன்று நாட்கள் நடைபெற உள்ளது. இந்த மூன்றாவது நிலையான நிதி பணிக்குழு  (SFWG) மாநாட்டில் வெளிநாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர். 

இந்த பிரதிநிதிகள் அனைவரும் மகாபலிபுரத்தில் நடைபெற உள்ள கருத்தரங்கில் பங்கேற்க உள்ளனர;   ஆகவே, 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் சென்னை பெருநகர காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மேற்கூறிய பிரதிநிதிகள் வருகை, தங்கும் இடங்கள் மற்றும் மேற்படி பிரமுகர்கள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது

எனவே அந்தப் பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் 18-6-2023 முதல் 22-6-2023 வரையில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்குத் தடை விதிக்கப்படுகிறது.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.