சென்னை

தெற்கு ரயில்வே சென்னை கோட்ட பொது மேலாளர் வரும் 27ஆம் தேதி முதல் பறக்கும் ரயில் சேவை வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.

சென்னை கடற்கரை மற்றும் வேளச்சேரி இடையே நடக்கும் ரயில் சேவைக்குப் பறக்கும் ரயில் சேவை என பெயரிடப்பட்டுள்ளது.  இந்த ரயில் பெரும்பாலும் மேம்பாலத்தின் மீதே செல்வதால் இந்தப் பெயரில் அழைக்கப்படுகிறது.

இன்று தெற்கு ரயில்வே சென்னை கோட்டப் போது மேலாளர் விஸ்வநாத்,

”சுமார் 7 மாத காலத்துக்குச் சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழித்தட விரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் நடைபெற உள்ளது.

எனவே சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள் அனைத்தும் வரும் 27 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும்.

சென்னை நகரில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி தொடர்பான வரைபடம் தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது”

  என அறிவித்துள்ளார்.