மகளிருக்கான கட்டணமில்லா பேருந்துக்கு பிங்க் நிறம் அடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பெண்களுக்கான இலவச பஸ் பயணத் திட்டம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது இதனால் 62 பயன்பெறும் மகளிரின் எண்ணிக்கை சதவீதமாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலவச பயணம் அனுமதிக்கப்பட்டுள்ள நகர பஸ்களை, பெண்கள் எளிதில் அடையாளம் காணும் வகையில், ‘பிங்க்’ நிறம் பூச முடிவு செய்யப்பட்டுள்ளது.

முதல்கட்டமாக சென்னை குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள மூன்று பஸ்களுக்கு இளஞ்சிவப்பு நிறம் பூசும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக உயர் அதிகாரிகள் கூறுகையில் “பெண்கள், மாற்றுத் திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பஸ்களுக்கு, தனி நிறம் பூச முடிவு செய்தோம். அதன்படி, இளஞ்சிவப்பு நிறம், பஸ்சின் முன் மற்றும் பின் பகுதியில் பூசும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாதிரிக்காக, மூன்று பஸ்களில் இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அரசின் ஒப்புதல் கிடைத்த பின், படிப்படியாக மற்ற அனைத்து சாதாரண கட்டண பஸ்களிலும் இளஞ்சிவப்பு நிறம் பூசப்படும்” என்று கூறியுள்ளனர்.