சென்னை:

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச பஸ் தொடர்ந்து வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறிப்பில்,‘‘பஸ் கட்டணம் அதிகரித்த போதும் பள்ளி மாணவர்களுக்கு தொடர்ந்து இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். ஒன்று முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு 22,66,483 பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகையுடன் பஸ் பாஸ் வழங்கப்படும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.