நாடாளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்களவைக்கு உள்ளே நடைபெற்ற தாக்குதல் தொடர்பாக மைசூரைச் சேர்ந்த மனோரஞ்சன் மற்றும் சாகர் சர்மா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளையில் நாடாளுமன்ற வளாகத்தின் அருகே போக்குவரத்து பவன் அருகே ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட நீலம் என்ற பெண் மற்றும் அமோல் ஷிண்டே ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த தாக்குதல் தொடர்பாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் அவை கூட உள்ளதாகவும் அப்போது இந்த தாக்குதல் தொடர்பான விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கி இருக்கும் இந்த சம்பவம் எம்.பி.க்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.