சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த  முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாசுக்கு விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சுற்றுபயணத்தின் போது அவரது பாதுகாப்பு பணியை கவனித்து வந்த சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், எடப்பாடியின் சுற்றுப்பயணத்தின்போது, அந்த மாவட்ட  பெண் எஸ்பி மரியாதை நிமித்தமாக சிறப்பு டிஜிபிஐ சந்தித்துள்ளார். அப்போது சிறப்பு டிஜிபி, பெண் எஸ்பியிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. ங

இது குறித்து முன்னாள் டிஜிபி மற்றும் உள்துறைச் செயலரிடம் பெண் ஐபிஎஸ் புகார் அளித்தார். இதுதொடர்பான விசாரணையை அடுத்து,  சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கு உதவிய எஸ்.பியும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போது இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 20-ம் தேதிக்குள் முடிக்க விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது,  சஸ்பெண்ட் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.  அதையடுத்து முன்னாள் சிறப்பு டிஜிபி மற்றும் மற்றொரு ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்ஜாமீன் வழங்கி விழுப்புரம் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.