சென்னை:

முன்னாள் டிஐஜி கண்ணனுக்கு பதவி உயர்வு அளிக்காதது தொடர்பான விசாரணையில் முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் டிஐஜி கண்ணன் தனது பதவி உயர்வு வழங்கவில்லை என்று காவல்துறை ஆணையாளர்மீது நீதி மன்றத்தில் ஏற்கனவே வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அவருக்கு பதவி உயர்வு அளிக்க காவல் ஆணையருக்கு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இதுவரை அவருக்கு பதவி உயர்வு அளிக்காததால், கண்ணன் மீண்டும் நீதி மன்றத்தை நாடினார்,

அதைத்தொடர்ந்து நீதிமன்றம் உத்தரவிட்டும் பதவி உயர்வு அளிக்காததால் முன்னாள் ஆணையர் ஜார்ஜ் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற  நீதிபதிகள் சசிதரன், முரளிதரன் அமர்வு உத்தரவிட்டுள்ளது.