சென்னை: கள்ளஓட்டு போ வந்த திமுக நபரை தாக்கிய வழக்கில், கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை முன்னாள் முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமா  எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  எஸ்.பி வேலுமணி ஆகியோர் சிறைக்கு சென்று சந்தித்து பேசினர்.

19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது கள்ள ஓட்டு போட முயன்றதாக கூறி திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவரை தாக்கி, அரை நிர்வாணமாக இழுத்து சென்றதாக புகாரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட அதிமுகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ் .பி வேலுமணி எம்.எல்.ஏ  சந்தித்து பேசினர்.