சென்னை: முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன தண்டனை விதித்து உத்தரவிட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, முதலமைச்சர் மற்றும் ஆட்சியாளர்கள் குறித்து விமர்சனம் செய்யும் எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள்  கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அவர்கள்மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குகளை பதிவு செய்யும் காவல்துறையினர், அவர்களை நள்ளிரவில் கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் கடந்த 19-ம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி பற்றி முன்னாள் அதிமுக எம்எல்ஏ குமரகுரு அவதூறாக பேசியுள்ளார்.  இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி திமுக நிர்வாகி வெங்கடாசலம் அளித்த புகாரில் குமரகுரு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,  முதலமைச்சர் குறித்து விமர்சித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குமரகுருவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நூதன நிபந்தனை விதித்துள்ளது. ஒரு பொதுக்கூட்டத்தை நடத்தி தான் பேசியதற்கு குமரகுரு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.