சென்னை:

மக்களவை தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கு, வரும் 25-ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என திமுக தலைமை அறிவித்துள்ளது.

பூர்த்தி செய்த விண்ணப்பத்தை மார்ச் 7 -ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். வேட்பாளர் விண்ணப்ப கட்டணம் ரூ. 25 ஆயிரமாக நிர்ணயக்கப்பட்டுள்ளது.

21 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் மார்ச் 1 முதல் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.