சென்னை

அடுத்த 3 மணி நேரத்துக்குத் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. 

தற்போது தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சியின் காரணமாகத் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்துவருகிறது.

சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.