சென்னை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்னும் 4 நாட்களுக்குத் தமிழகத்தில் வறண்ட வானிலை காணப்படும் என அறிவித்துள்ளது.

இன்று சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”15.02.2024 மற்றும் 16.02.2024தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.

17.02.2024 முதல் 21.02.2024 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 பாகை செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.