கால்பந்து ஜாம்பவன் ரோனால்டாவுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஆண்குழந்தை மரணத்தை எய்தியுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ரோனால்டோ, “எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம்” என்று கண்ணீருடன் டிவிட் பதிவிட்டுள்ளார்.

பிரபல கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவரது மனைவி பெயர்  ஜார்ஜினா ரோட்ரிகஸ். இவர்களுக்கு ஏற்கனவே 4 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஜார்ஜினா மீண்டும் கர்ப்பம் அடைந்திருந்தார். தொடர்ந்து, விரைவில் குழந்தை பிறக்க இருப்பதாகவும் ரோனால்டோ டிவிட்டியிருந்தார். இந்த நிலையில், ஜார்ஜினாவுக்கு பிறந்த 2 குழந்தைகளில், பெண்குழந்தை உயிருடன் இருப்பதாகவும், ஆண்குழந்தை, உயிரிழந்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள ரொனால்டோ, “எங்கள் குழந்தையின் மரணத்தை ஆழ்ந்த சோகத்துடன் அறிவிக்கிறோம். எந்தவொரு பெற்றோரும் உணரக்கூடிய மிகப்பெரிய வலி இது. எனினும், எங்கள் பெண் குழந்தை பிறந்தது மட்டுமே இந்த தருணத்தை ஓரளவு நம்பிக்கையுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ வலிமை அளிக்கிறது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களால் வழங்கப்பட்ட அனைத்து பராமரிப்பு மற்றும் ஆதரவிற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம்.  இந்த கடினமான நேரத்தில் நாங்கள் பேரழிவிற்கு ஆளாகி தனிமையில் இருக்க விரும்புகிறோம். எங்கள் பையன், எங்கள் தேவதை. நாங்கள் எப்பொழுதும் உன்னை நேசிப்போம்” என்று கண்ணீர் மல்க பதிவிட்டுள்ளார்.