சென்னை:
நெல் கொள்முதல் செய்வது குறித்து விவசாயிகளுடன் உணவுத்துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்த உள்ளனர்.

மத்திய அரசின் இந்திய உணவு கழகம் சார்பில், தமிழக விவசாயிகளிடம் இருந்து, நுகர்பொருள் வாணிப கழகம் நெல் கொள்முதல் செய்கிறது.

இந்நிலையில், சென்னையில் உள்ள வேளாண் துறை அலுவலகத்தில், விவசாயிகளுடன் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் வேளாண், உணவு, கூட்டுறவு ஆகிய துறைகளின் அதிகாரிகளும், விவசாயிகளும்பங்கேற்கின்றனர்.