தூத்துக்குடி 

தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென் தமிழகப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதியில் இன்று புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

எனவே தென் தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.நேற்று நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கடும் மழை பெய்தது.

தாமிரபரணி ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்ததால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருவைகுண்டம், மருதூர், கலியாவூர், புன்ன காயல் ஆகிய பகுதி மக்களுக்கு ஆட்சியர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.