மேட்டூர்

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டி அணை நீர் திறக்கப்பட உள்ளதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களில் உள்ள காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.  எனவே மேட்டூர் அணைக்கு நீர் வரத்து மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.   அதே வேளையில் அணையில் இருந்து நீர் திறப்பதும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தற்போது மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் பொதுப்பணித்துறை விநாடிக்கு 1.43 லட்சம் கன அடி நீரை திறக்க முடிவு செய்துள்ளது.  எனவே கரையோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே கடலூர், அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொள்ளிடக் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.    மேலும் ஆற்றில் இறங்கவோ குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.