லங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்கக் கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடர்கிறது
தமிழக கடலோர பகுதிகளில் இருந்து மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைப்பிடித்துச் செல்லுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் தமிழக மீனவர்கள் கடலுக்குச் செல்ல  அஞ்சும் நிலை உருவாகியுள்ளது.
இதையடுத்து  மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
2
அவர்களின் போராட்டம் இரண்டாவது  நாளாக இன்றும் தொடர்கிறது. இதனால், 800-க்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குச் செல்லமாமல் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கின்றன.
இலங்கை வசம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும், 77 மீனவர்களையும் விடுவிக்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என மீனவர்கள் புகார் தெரிவிக்கிறார்கள்