2018-ம் ஆண்டு நானி தயாரிப்பில் வெளியான ‘ஆவ்!’ என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரசாந்த் வர்மா.

தற்போது தனது அடுத்த படத்துக்குத் தயாராகி, அதன் அறிவிப்பை வீடியோவாக வெளியிட்டுள்ளார் பிரசாந்த் வர்மா. ஜாம்பிகளை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ள இந்தப் படத்துக்கு ‘ஜாம்பி ரெட்டி’ எனத் தலைப்பிட்டுள்ளார்.

தெலுங்கில் உருவாகும் முதல் ஜாம்பி படமாக ‘ஜாம்பி ரெட்டி’ அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. ராஜசேகர் வர்மா தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனித் ஒளிப்பதிவாளராகவும், மார்க் கே.ராபின் இசையமைப்பாளராகவும், சாய் பாபு எடிட்டராகவும் பணிபுரியவுள்ளனர்.