சென்னையில் மழை வெள்ள பாதிப்புகளுக்கு ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக  சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தமிழ்க சட்டப்பேரவையின் கடைசி நாள் கூட்டமான இன்று  ஆளுநர் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பதிலுரை ஆற்றினார்.

அப்போது, பல்வேறு அறிவிப்புகள், விளக்கங்களை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின் சென்னையில் மழை, வெள்ள பாதிப்புகளை சரி செய்யவும்,  வருங்காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க தேவையான நிதி ஒதுக்கப்படும் என்றார்.

மேலும், முதற்கட்டமாக சென்னை மழை பாதிப்புக்கு  ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும் அறிவித்தார்.