சென்னை:
சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று முதல் பாத யாத்திரை நடத்தப்பட உள்ளதாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தென்காசியில் இன்று தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில் பாத யாத்திரை துவங்குகிறது.

விடுதலை போராட்ட உணர்வுகள் நினைவுகூரப்பட்டு, தேசிய மறுமலர்ச்சிக்கு வித்திடுகிற வாய்ப்பு ஏற்பட்டு உள்ள இந்த பாதயாத்திரை வரும் 14-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.