சென்னை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியார் பட்டாக ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.

அதன்படி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே  ஆனையூா்  பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில்  நேறறு (புதன்கிழமை) வெடி விபத்து ஏற்பட்டது. இந்த  விபத்தில்  அங்கு பணியாற்றி வந்த சுரேஷ் என்பவர் உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,   விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள ஆனையூர் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் புதன்கிழமை மாலை எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் திருத்தங்கல்லைச் சோ்ந்த சுரேஷ் (42) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன். வாரணாசியில் தவிக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர்கள்: விமானத்தில் அழைத்து வர தமிழக அரசு ஏற்பாடு! மேலும், இந்த விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் பால்பாண்டி (31) என்பவருக்கு சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் .

இவ்வாறு கூறியுள்ளார்.