திருச்சி,

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே பணிமனையில் உள்ள எண்ணெய் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீயை அணைக்கும் பணயில் 4 வாகனங்களில் வந்த  20 வீரர்கள்  போராடி வருகின்றனர்.

தீ விபத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். சேத விவரம் குறித்தும் எந்தவித விவரமும் தெரியவில்லை.