சென்னை:
யில்களில் பட்டாசு எடுத்து சென்றால் அபராதம் விதிக்கப்படும் என்று ரயில்வே பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் தெரிவிக்கையில், விதியை மீறி பட்டாசு எடுத்துச் சென்றால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.முதன்முறையாக பிடிப்பட்டால், 1,000 ரூபாய் அபராதம் அல்லது ஆறு மாதங்கள் சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், தொடர்ந்து, இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.