கும்பகோணம்:

கும்பகோணம் அருகே உள்ள  சத்திரம் கருப்பூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில்  இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இன்று சுவாமி அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த துணியில் தீ பிடித்து எரிந்தாகவும், அருகில் இருந்தவர்கள் உடனடியாக தீயை அணைத்தால் பெரும் விபத்து  தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோவில் தீ விபத்து காரணமாக பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
தீ விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோயிலின் கருவறையில்  எரிந்து வந்த  விளக்குகளை அணைக்காமல் சென்றதால் தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து, குடந்தை கும்பேஸ்வரர் கோவில் தீ விபத்து,வேலூர் அருகே கோவில் தேர்கள் எரிந்து நாசம் என்பது போன்று இந்த  ஆண்டு தொடங்கியது முதல் கோவில்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.