மும்பை:

மும்பை விமான நிலையம் உள்நாட்டு முனையத்தில் இன்று திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

மும்பை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்கள் வந்து செல்லும் முனைய கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கூட்ட அரங்கின் அருகே முதலில் ஏற்பட்ட தீ பின்னர் முதல் தளம் வரை பரவியது. இதை கண்ட பயணிகள் அலறியடித்து ஓடினர்.

விமான நிலையத்தில் 9-வது நுழைவு வாயில் அருகே உள்ள இந்த கட்டிடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் 9 தீயனைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. சேத மதிப்பு உடனடியாக தெரியவில்லை. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.