டெல்லி: தமிழக அரசு கூடுதலாக கடன் வாங்க மத்திய நிதியமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

ஜிஎஸ்டி வருவாய் இழப்பீட்டை ஈடு செய்யும் வகையில் குறிப்பிட்ட தொகையை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. ஆனால், இந்தாண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகையை நிதி பற்றாக்குறை காரணமாக மாநில அரசுகளுக்கு வழங்க இயலாது என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.
இழப்பீட்டை ஈடு செய்ய வெளிச்சந்தையில் கடன் வாங்கி கொள்ள அனுமதி வழங்க தயாராக இருப்பதாகவும்  மத்திய அரசு கூறியது. அதன்படி கடன் வாங்க 21 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்தன. இந் நிலையில் தமிழக அரசு வெளிச்சந்தையில் ரூ.9,627 கோடி வாங்கி கொள்ள மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.