தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்புகள் அனைத்துமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் தினசரி தொழிலாளர்களுக்கு உதவ பெப்சி அமைப்பு நிதியுதவி மற்றும் பொருளுதவி வசூல் செய்து வருகிறது.

அவர்களை தொடர்ந்து நடிகர் சங்கத்தில் வங்கிக் கணக்கு ஒன்றை வெளியிட்டு நிதியுதவி வழங்க நடிகர் சங்கத்தின் சிறப்பு அலுவலர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

ஐசரி கணேஷ் – 10 லட்ச ரூபாய்

கார்த்தி – 2 லட்ச ரூபாய்

சூரி – 1 லட்ச ரூபாய்

எஸ்.ஜே.சூர்யா – 50 ஆயிரம் ரூபாய்

நாசர் – 50 ஆயிரம் ரூபாய்

பொன்வண்ணன் – 25 ஆயிரம் ரூபாய்

சாய் ப்ரதீப் ( எ) ஆதி – 25 ஆயிரம் ரூபாய்

சங்கீதா – 15 ஆயிரம் ரூபாய்

பூச்சி முருகன் – 10 ஆயிரம் ரூபாய்

சத்யப்ரியா – 10 ஆயிரம் ரூபாய்

சேலம், பார்த்திபன் – 10 ஆயிரம் ரூபாய்

கோவை சரளா – 10 ஆயிரம் ரூபாய்

ரோகிணி – 10 ஆயிரம் ரூபாய்

லதா சேதுபதி – 10 ஆயிரம் ரூபாய்

நாகிநீடு – 10 ஆயிரம் ரூபாய்

சச்சு (எ) சரஸ்வதி – 10 ஆயிரம் ரூபாய்

பிரபா ரமேஷ் – 10 ஆயிரம் ரூபாய்

சந்தான பாரதி – 5 ஆயிரம் ரூபாய்

மாலதி (எ) ரித்விகா – 5 ஆயிரம் ரூபாய்

ப்ளாக் பாண்டி (எ) லிங்கேஸ்வரன் – 100 ரூபாய்

இதுவரை மொத்தமாக 15, 65,100 ரூபாய் வசூலாகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது,