சென்னை: தமிழ்நாட்டில்,  தனியார் பள்ளிகள் குழந்தைகள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில்  இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது. பள்ளி வாகனங்களில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தமிழநாடு பள்ளிக்கல்வித்துறை, வரும் கல்வியாண்டு முதல்,  பள்ளி வாகனங்களுக்கு கட்டுப்பாடு அறிவித்து உள்ளது. அதன்படி” பள்ளி வாகனங்களில் மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதை தடுக்கும் வகையில்   இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும் என்று  உத்தரவுட்டு உள்ளது.  இதற்காக புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் கட்டாயம் இருக்க வேண்டும்.

10 ஆண்டுகள் அனுபவம் உள்ள கனரக வாகன ஓட்டுநர்களை பணில் நியமிக்க வேண்டும்

. அத்துடன் ஓட்டுநர் மற்றும் உதவியாளர் மீது குற்ற நடவடிக்கை இல்லை என்பதை பள்ளி நிர்வாகங்கள் சரி பார்க்க வேண்டும்.

வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என்பதை தினமும் பரிசோதிக்க வேண்டும்.

போக்சோ சட்ட விதிகள் பற்றி ஓட்டுநர் மற்றும் உதவியாளருக்கு தெளிவாக விளக்கப்பட வேண்டும்.

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அந்த காட்சிகள்  சேகரிக்கப்பட்டு காவல்துறையிடம் வழங்கப்பட வேண்டும்.

கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க நியமிக்க வேண்டும்.

ஓட்டுநர்களுக்குத் தினமும் சுவாச சோதனை செய்தபின் தான் வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும்.

பள்ளி வாகனங்களில் ஓட்டுநர், உதவியாளர் குறித்த விவரங்களை பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் நாளை மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்

பள்ளி வாகனங்கள் தொடர்பான அனைத்து தகவல்களையும் ஏப்.5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தனியார்ப் பள்ளிகள்) உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளி வாகனங்களில் மாணவியர்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக வரும் புகாரையடுத்து தனியார் பள்ளிகள் இயக்குனர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.