சென்னையில் நிதி அகர்வாலுக்கு கோவில் கட்டி அவரின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்திருக்கிறார்கள் ரசிகர்கள். பாலாபிஷேகம் செய்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டு நிதி அகர்வாலுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

தமிழகத்தில் நடிகைகளுக்கு கோவில் கட்டுவது புதிது அல்ல. முன்னதாக குஷ்பு, நமிதா, ஹன்சிகா, நயன்தாரா ஆகியோருக்கு கோவில் கட்டியிருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் பூமி, சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் நிதி அகர்வால்.