சென்னை

பிரபல கிரிக்கெட் விரர் முத்தையா முரளிதரன் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் இலங்கை குடிமகன் என்றாலும் இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார்.  இவருடைய மனைவியும் தமிழ்ப்பெண் ஆவார்.  தற்போது இலங்கை அணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக எடுக்கப்பட இருந்தது.

ஒரு சில சர்ச்சை கார்ணமாக அந்த படத்தில் நடிக்க இருந்த விஜய் சேதுபதி விலகியதால் தற்போது படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.    முத்தையாவுக்கு அகில உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமாக உள்ளனர்.  தற்போது அவர் ஐபிஎல் தொடருக்காக சென்னையில் தங்கி உள்ளார்.  அவருக்கு நேற்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

அதையொட்டி அவர் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.   மருத்துவ பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை ஆஞ்சியோகிராம் சிகிச்சைக்கு வற்புறுத்தியதால் முத்தையா முரளிதரன் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.