ஈரோடு:
ரோடு வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி சிந்தனை அரங்கத்தில் கே.பாக்கியராஜ் கலந்து கொண்டு பேசினார்.
a
அப்போது அவர், “நிறைய பேரு இன்னமும் சாமி, சாமி  அப்படின்னு  சொல்லிக்கிட்டு இருக்காங்க..   அவங்கள புரிஞ்சிக்காம,  நம்ம காலில் விழுந்துகொண்டு இருக்காங்க. அப்புறம் அந்த ஆசாமிகள்ட்ட  சிக்கி சீரழிஞ்சி, இந்த சாமி அப்படி ஏமாத்தினார். அந்த சாமி இப்படி ஏமாத்தினார்னு புலம்பறாங்க!
நம்ம தாய்மார்கள்,  இந்த சாமி விஷயத்தில மட்டும் இன்னும் ஏமாந்துகிட்டே இருக்காங்க.  தயவு செஞ்சி, கடவுளின் பிரநிதிகள் அப்படின்னு தங்களை சொல்லிக்கிற  ஆசாமிகள்ட்ட பெண்கள் ஏமாந்துவிடக்கூடாது.  விழிப்புடனும்,  எச்சரிக்கையுடனும் இருக்கணும்!” என்று கே.பாக்யராஜ் பேசினார்.