சென்னை:
மெட்ரோ ரயிலில் முகக்கவசம் கட்டாயம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இதையடுத்து, தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளதுடன், பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் மெட்ரோ ரெயில் பயணிகளுக்கு முகக்கவசம் கட்டாயம் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.