சென்னை:
நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ நிர்வாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்றும், விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.