டில்லி

முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி இந்தியாவில் நலிந்து வரும் சர்க்கஸ் தொழிலை ஊக்குவிக்க வேண்டும் எனவலியுறுத்தி உள்ளார்.

நேற்று டில்லியில் 4 நாள் சர்வதேச சர்க்கஸ் திருவிழா நேற்று தொடங்கியது.  விழாவில் இந்தியா, ரஷ்யா, கிர்கிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாட்டு சர்க்கஸ் கலைஞர்கள் பங்கேற்றுள்ளனர்.  இந்த சர்க்கஸ் திருவிழாவை முன்னாள் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி நேற்று தொடங்கி வைத்தார்.

அவர் தனது உரையில்,

“கிராமங்கள் மற்றும் நகரங்களில் மிகவும் பிரபலமான சர்க்கஸ் தொழில் தற்போது தாக்குப்பிடிக்க முடியாமல் போராடுகிறது.  இப்போதைய டிஜிட்டல் யுகத்தில் எண்ணற்ற பொழுதுபோக்கு ஊடகங்கள் கிடைப்பதால் நாட்டில் சர்க்கஸ் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று கால ஊரடங்கு காரணமாகவும் இத்தொழில் பெரும் இழப்பைச் சந்தித்தது. என்றாலும் சர்க்கஸ் இந்தியாவில் தனக்கென ஓர் ஈர்ப்பைக் கொண்டுள்ளது.

பொதுவாக சர்க்கஸ் பொழுதுபோக்கு ஊடகம் மட்டுமல்ல. பெரிய அளவில் கலைஞர்கள் மற்றும் பிறருக்கு வேலைவாய்ப்பையும் வழங்குகிறது. ஆகவே சர்க்கஸ் தொழிலை ஊக்குவிக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்”. .

எனக் கூறினார்.