டில்லி

னாதிபதி நாடாளுமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைக்கக் கோரி  அளிக்கப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது.

டில்லியில் சுமார் ரூ.850 கோடி மதிப்பில் பிரமாண்ட நாடாளும ன்ற கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி இதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தற்போது ‘சென்டிரல் விஸ்டா’ என்ற திட்டத்தின் கட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற கட்டடப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.

வரும் 28 ஆம் தேதி இதனைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.  ஆனால் நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறந்து வைக்க வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.  இதையொட்டி திறப்பு விழாவைப் புறக்கணிப்பதாக எதிர்க்கட்சிகள் அறிவித்து உள்ளன.

ஜனநாயகத்தின் கோவிலாகத் திகழும் நாடாளுமன்ற திறப்பு விழாவில் எதிர்க்கட்சிகள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று ஆளும் பா.ஜ.க. அரசு அழைப்பு விடுத்துள்ளன. நாடாளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திரௌபதி முர்மு திறந்து வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில் நேற்று பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இந்த மனுவைத் தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த வழக்குரைஞர் ஜெய் சுகின் என்பவர் தாக்கல் செய்துள்ளார்.  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த அந்த மனுவில்,-

”அரசியலமைப்பு சட்டம் 79- ஆவது பிரிவில் நாடாளுமன்றம் என்பது ஜனாதிபதியையும் இரு அவைகளையும் கொண்டது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. நாட்டின் முதல் குடிமகனாக உள்ள ஜனாதிபதியே நாடாளுமன்றத்தைக் கூட்டவும், ஒத்திவைக்கவும் அதிகாரம் படைத்தவர். பிரதமரையும், மந்திரிகளையும் நியமிப்பதுடன், மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளும் ஜனாதிபதியின் பெயரிலேயே எடுக்கப்படுகின்றன.

இதுபோன்ற சூழலில் புதிய நாடாளுமன்றத்தைத் திறப்பதற்கு அவருக்கு அழைப்பு விடுக்காதது, ஜனாதிபதியின் மதிப்பைக் குறைப்பது மட்டுமின்றி அரசியலமைப்பு சட்டத்தையும் மீறுவதாக உள்ளது.   இந்த விவகாரத்தில் மக்களவை செயலாளரின் அழைப்பிதழ் தன்னிச்சையானது. எனவே புதிய  நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரௌபதி முர்முவை கொண்டு திறக்க மக்களவை செயலாளருக்கு உத்தரவிட வேண்டும்”

என்று கூறப்பட்டுள்ளது.

இன்று இந்த மனு நீதிபதிகள் மகேஸ்வரி, நரசிம்மா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது.