துரை

சோழவந்தான் முன்னாள் அதிமுக எம் எல் ஏ மாணிக்கம் பாஜக்வில் இணைந்து மீண்டும் அதிமுகவில் சேர்ந்துள்ளார்.

சோழவந்தான் தொகுதியின் முன்னாள் எம் எல் ஏ மாணிக்கம் அதிமுக வழி காட்டுதல் குழுவில் இடம் பெற்றிருந்தார்.  சென்ற மாதம் அதாவது நவம்பர் 24 ஆம் தேதி பாஜகவில் இவர் இணைந்தார்.  அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வந்த நேரத்தில் மாணிக்கம் பாஜகவில் இணைந்தது பலரது கவனத்தை ஈர்த்தது.

திருப்பூரில் நடந்த பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் இந்த இணைப்பு நடந்தது.   இந்த இணைப்பு நடந்து சுமார் 10 நாட்களே ஆகி உள்ளன.  இந்நிலையில் மாணிக்கம் பாஜகவில் இருந்து விலகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதை அதிகரிப்பது போல் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.  இன்று அவர் முன்னாள் அமைச்சரும் அதிமுக பிரமுகருமான உதயகுமார் முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார்.   பாஜக சென்று 10 நாட்களிலேயே அவர் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பி வந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.