சென்னை:
ரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

நேற்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தினேஷ் குண்டுராவ், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் காங்கிரஸ் வேட்பாளர் குறித்து இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது. இன்று நடைபெறும் ஆலோசனைக்கு பிறகு வேட்பாளர் பெயர் கட்சி தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் வேட்பாளர் பெயரை அனுப்பி வைத்த பிறகு கட்சி தலைமை முடிவு செய்யும் எனவும் கூறினார்.