ஆர்.கே.நகரில் வெற்றிபெற்ற தினகரனுக்கு சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ் தற்போது முதல்வர் பழனிசாமி அணியில் இருக்கிறார். இவர் தற்போது, “ஈபிஎஸ்-ஓபிஎஸ்-தினகரன் மூவரும் இணைய வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“மூவரும் இணைவது கூடிய விரைவில் நடக்கும். இதை நான் உட்பட தொண்டர்கள் அனைவரும், விரும்புகிறோம், தினகரன், ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் இணைந்து கட்சி மற்றும் ஆட்சியை வழி நடத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.