சென்னை:
துணிகள் தயாரிப்பில் ஈடுபட ரோபோக்களே போதும்… தொழிலாளர்கள் தேவையில்லை என கூறுகிறது பிரபல ரேமண்ட்ஸ் நிறுவனம்.
ஜவுளித் துறையில் சிறந்து விளங்கும் ரேமண்ட்ஸ் நிறுவனம் தங்களது உற்பத்தி மையங்களில் இருந்து மூன்று வருடத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்களைப் பணியை விட்டு நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ரேமண்ட்ஸ் நிறுவன சிஇஓ சஞ்ஜய் பெல்
ரேமண்ட்ஸ் நிறுவன சிஇஓ சஞ்ஜய் பெல்

இதுகுறித்து ரேமண்ட்ஸ் நிறுவன தலைமை செயல் அதிகாரி சஞ்ஜய் பெல், வரும் காலங்களில் தொழிலாளர்களை நீக்கிவிட்டு ரோபோக்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைப் பணியில் ஈடுபடுத்த இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ரேமண்ட்ஸ் நிறுவனம், தனது நிறுவனத்தின் கீழ் உள்ள 16 உற்பத்தி ஆலைகளில் மொத்தம் 30,000 தொழிலாளர்கள் பணியில் உள்ளனர். ஒவ்வொரு தொழிற்சாலையிலும் குறைந்த பட்சம் 2000 தொழிலாளர்கள்  பணியில்  உள்ளனர். ரோபோக்கள் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் ஆட்குறைப்பு ஏற்படும். இதன் காரணமாக 10ஆயிரம் தொழிலாளர்கள் நீக்கப்படுவார்கள். 20 ஆயிரம் தொழிலாளர்கள்  மட்டுமே வேலைக்கு போதுமான என்றார்.
1raymond-factory
மேலும்,  ஒரு ரோபோட் 100 பணியாளர்களுக்குச் சமம், 100 பேர் செய்ய வேண்டிய வேலையை ஒரு ரோபாவால் மட்டுமே செய்ய முடியும். தற்போது இதுபோன்ற ரோபோக்கள்  சீனாவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது, விரைவில் இந்தியாவிலும் இது நடக்கும் என்றார்.
ஜவுளித் துறையில் நிறைய மனிதவளம் தேவைப்படுகின்றது. அதைக் குறைக்கும் முயற்சியில் தொழில்நுட்பங்களை நிறுவும் குழு செயல்பட்டு வருவதாகக் கூறினார்.
தொழில்நுட்பங்களின் ஆதிக்கம்  குறிப்பாக உற்பத்தித் துறைகளில்  அதிகமாகி வருகிறது என்று கூறியுள்ள நிபுணர்கள், இதனால் இந்தியாவில் 10 சதவீதம் வரை வேலையின்மை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
1robot
இதுகுறித்து  அமெரிக்க ஆய்வு நிறுவனம் ஒன்று கருத்து தெரிவிக்கையில்,  இந்திய ஐடி சேவைத் துறைகள் மற்றும் உற்பத்தித் துறைகளில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப வளர்ச்சியால் இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் 6.4 லட்சம் பணியாளர்கள் வேலையை இழப்பார்கள் என்று தெரிவித்துள்ளது
அதேவேளையில் ஒரு பக்கம் வேலை இழப்பு அதிகரிக்கும் என்ற சூழ்நிலையில், 56 சதவீதம் வரை அதிக திறமையுள்ளவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
பிக் டேட்டா, பகுப்பாய்வு, இயந்திர கற்றல், இயக்கம், வடிவமைப்பு, இணையதள விவரங்கள், செயற்கை நுண்ணறிவு போன்ற பிரிவுகளில் அதிக வருமானத்துடன் கூடிய வேலை வாய்ப்பு பெருகும் என்றும் கூறப்படுகிறது.
Credit: www goodreturns.in