சென்னை: இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் முதல் இன்னிங்ஸில் ஆடிவரும் இங்கிலாந்து அணி 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.

பந்துவீச்சுக்கு சாதகமாக மாற்றியமைக்கப்பட்ட சேப்பாக்கம் பிட்சில், இந்திய அணி தன்னம்பிக்கையுடன் ஆடி 329 ரன்களைக் குவித்தது.

ஆனால், தனது முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து, ரன் கணக்கைத் துவக்கும் முன்னரே, துவக்க வீரர் ஜோசப் பர்ன்ஸ் விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் டக்அவுட் ஆனார். அவரின் விக்கெட்டை எடுத்தவர் இஷாந்த் ஷர்மா.

பின்னர், டாம் சிப்லி 3 பவுண்டரிகளை இஷாந்த் ஓவரில் அடித்து சற்று அதிரடி காட்ட, அவரை அஸ்வின் 16 ரன்களுக்கு திருப்பியனுப்பினார். பின்னர், டாம் லாரன்சுடன், கேப்டன் ஜோ ரூட் இணைந்தார். அவர் 6 ரன்களுக்கு அக்ஸார் படேல் பந்தில் அவுட்டானார்.

இதனால், 23 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது இங்கிலாந்து. தற்போது டாம் சிப்லியும், ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்சும் ஆடிவருகிறார்கள்.