சென்ன‍ை: இந்தியாவுக்கு எதிரான சென்னை இரண்டாவது டெஸ்ட்டில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 134 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது.

இந்தியாவின் அஸ்வின் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அக்ஸர் படேல் மற்றும் இஷாந்த் ஷர்மாவிற்கு தலா 2 விக்கெட்டுகள் கிடைத்தன. சிராஜ் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார்.

பின்வரிசையில் களமிறங்கிய இங்கிலாந்தின் பென் ஃபோக்ஸ், கடைசிவரை ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் அடித்து, இந்திய பந்துவீச்சாளர்களுக்கு போக்குக் காட்டினார். அந்த அணியில் அதிகபட்ச ரன்கள் அடித்தவரும் அவர்தான்.

மொத்தம் 59.5 ஓவர்கள் தாக்குப்பிடித்த இங்கிலாந்து, மொத்தமாக 134 ரன்கள் எடுத்து, இந்தியாவைவிட 195 ரன்கள் பின்தங்கியுள்ளது. பெரிய எதிர்பார்ப்புடன் அணியின் எடுக்கப்பட்ட குல்தீப் யாதவிற்கு 1 விக்கெட் கூட கிடைக்கவில்லை.